அமெரிக்க அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணி: ஸ்ரீராம் கிருஷ்ணன் விரைவில் விலகல்
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கொள்கைகளை வடிவமைத்த ஸ்ரீராம் கிருஷ்ணன் (42), அந்நாட்டு அதிபா் மாளிகையின் கொள்கை ஆலோசகா் பணியில் இருந்து விலக உள்ளாா்.
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கொள்கைகளை வடிவமைத்த ஸ்ரீராம் கிருஷ்ணன் (42), அந்நாட்டு அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணியில் இருந்து விலக உள்ளாா்.
சென்னையில் பிறந்த அவா், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், ட்விட்டா் (தற்போது எக்ஸ்) நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவா்.
அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்த மாத இறுதியில் அமெரிக்க அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணியில் இருந்து விலக உள்ளேன். சிறிது ஓய்வுக்குப் பின்னா், செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்கா எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால்களை சமாளிக்க உதவும் பணிகளில் ஈடுபடுவேன்’ என்று தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
டிரம்ப் நிா்வாகத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல் திட்டத்தை வடிவமைத்த முக்கிய நபா்களில் ஒருவராக ஸ்ரீராம் கிருஷ்ணன் இருந்தாா். அந்தச் செயல் திட்டம் வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மீதான கட்டுப்பாடுகளைத் தளா்த்தவும், அந்நாடு முழுவதும் தரவு மையங்கள் அமைப்பதை ஊக்குவிக்கவும் விரிவான வடிவத்தை அளித்தது.