கபுனியின் பயிற்சியாளராக இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
கபுனி என்னும் செயற்கை நுண்ணறிவு கிரிக்கெட் பயிற்சி தளத்தின் பயிற்சியாளராக ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளது பற்றி...
கபுனி என்னும் செயற்கை நுண்ணறிவு கிரிக்கெட் தொழில்நுட்ப தளத்தின் சூப்பர் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் வெள்ளிக்கிழமை இணைந்துள்ளார்.
இந்த தளத்தின் சூப்பர் பயிற்சியாளராக ஏற்கெனவே, செளரவ் கங்குலி, ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் ஷேன் வாட்ஸன் ஆகியோர் உள்ள நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரும் இந்த வரிசையில் இணைந்துள்ளார்.
கபுனி என்பது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, விளையாட்டு வீரர்களின் நகர்வுகள் மற்றும் விளையாடும்போது பந்து வரும் வேகம் ஆகியவற்றைக் கண்காணித்து, அவற்றைக் குரல், காணொளி மற்றும் காட்சி வழிகாட்டுதல் மூலம் பதிவு செய்கிறது. பிறகு, அதனை வீரரின் ஆட்டத்தை மேம்படுத்தும் வகையில் பின்னூட்டமாக வழங்குகிறது.
Advertisement
Advertisement
மேலும், உயிரியல் இயக்கவியல் மற்றும் இயக்கக் கண்காணிப்பைப் பயன்படுத்தி, பயிற்சி முறைகளை ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள வீரர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேச அளவில் ”ஜாம்பவானுக்காக விளையாட விரும்புகிறீர்களா?" என்ற பெயரில், 12 முதல் 16 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்காக கபுனி சார்பில் இந்த மாதம் போட்டி நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.