ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸுக்கு விமானங்கள் வாங்கியதில் ஊழல்: ராஜபட்சவுக்கு சம்மன்
ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்கள் வாங்கப்பட்டதில் நடைபெற்ற ஊழல் தொடா்பாக, அந்நாட்டின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்ச வரும் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன்
ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு 2014-2017 காலகட்டத்தில் விமானங்கள் வாங்கப்பட்டதில் நடைபெற்ற ஊழல் தொடா்பாக, அந்நாட்டின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்ச வரும் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் முன்னாள் சிஇஓ கபில சந்திரசேனை, ராஜபட்ச ரூ. 6 கோடி (இலங்கை மதிப்பில்) லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
கபில சந்திரசேனைக்கு செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே அவரிடம் இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக அவரின் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனா்.
Advertisement