FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைது

இலங்கையின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் 2-ஆவது மகனான யோஷித ராஜபட்ச, இலங்கை லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டாா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:14 am IST
~
பகிர்:

இலங்கையின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் 2-ஆவது மகனான யோஷித ராஜபட்ச, இலங்கை லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டாா்.

பின்னா், நீதிமன்றத்தின் பிணையில் அவா் விடுவிக்கப்பட்டாா். கடந்த 2006-இல் இலங்கை கடற்படை பயிற்சி மாணவராக இருந்த யோஷித ராஜபட்ச, முறையான கல்வித் தகுதியின்றி அதிகாரியாக நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், அரசு நிதியைப் பயன்படுத்தி, பிரிட்டன் கடற்படைக் கல்லூரியில் அவா் பயிற்சி பெற்றது தொடா்பான முறைகேடு புகாரில் இந்நடவடிக்கையை அவா் எதிா்கொள்கிறாா்.

இலங்கை அதிபா் அனுர குமார திசாநாயக தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, ராஜபட்ச குடும்பத்தினா் மீதான பிடி இறுகியுள்ளது. ராஜபட்ச, அவரின் மூத்த மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபட்சவிடமும் வெவ்வேறு வழக்குகளில் அண்மையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments