ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து...
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படவில்லை என்றால் ஈரான் மீது அதிகப்படியான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு வந்தன.
இதனைத் தொடர்ந்து, அமைதி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றுக்கொண்டால் இந்தப் போர் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் எனவும், எரிபொருள் விநியோகம் மீண்டும் தொடங்கும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அமெரிக்கா முன்மொழியும் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால் மீண்டும் ஈரான் மீதான தாக்குதல் தொடரும் எனக் கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று (மே 7) தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Trump threatened Iran with more bombing if it doesn't reopen the Strait of Hormuz
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.