இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மீண்டும் காளையின் ஆதிக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடான சென்செக்ஸ் இன்று 2.54 சதவிகிதம் உயர்ந்து 79,117.11 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

News image
சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை- கோப்புப் படம்.
Updated On :22 நவம்பர் 2024, 12:10 pm

DIN

மும்பை: பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடான சென்செக்ஸ் இன்று 2.54 சதவிகிதம் உயர்ந்து 79,117.11 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து வாங்கியாதலும், அமெரிக்க சந்தைகளில் உறுதியான போக்கு நிலவியதாலும், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து சாதனை படைத்தது.

காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2,062.4 புள்ளிகள் உயர்ந்து 79,218.19 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில், வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1,961.32 புள்ளிகள் உயர்ந்து 79,117.11 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 557.35 புள்ளிகள் உயர்ந்து 23,907.25 முடிந்தது.

ப்ளூ சிப் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடி மற்றும் டெக் பங்குகள் ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதால் சந்தை உணர்வை மேலும் மேலும் இது அதிகரிக்க செய்தது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன், ஐடிசி, இன்போசிஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது.

வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் ரியாலிட்டி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இன்று உயர்ந்து முடிந்தது. நிஃப்டி-யில் பொதுத்துறை நிறுவன வங்கி பங்குகள் இன்று 2.47 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமானது.

அமெரிக்காவில் தொழிலதிபர் கௌதம் அதானி மீது லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்தும், பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்களில் பெரும்பாலான பங்குகள் வீழ்ச்சியிலிருந்து மீண்டு உயர்ந்து வர்த்தகமானது.

அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 3.50 சதவிகிதமும், ஏசிசி பங்குகள் 3.17 சதவிகிதமும், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 2.16 சதவிகிதமும், அதானி போர்ட்ஸ் பங்குகள் 2.05 சதவிகிதமும், அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 1.18 சதவிகிதமும், என்டிடிவி பங்குகள் 0.65 சதவிகிதம் உயர்ந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (நேற்று) வியாழக்கிழமை ரூ.5,320.68 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.4,200.16 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் சியோல் மற்றும் டோக்கியோ உயர்ந்து முடிந்த வேளையில், ஷாங்காய், ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய சந்தைகள் சரிந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.19 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 74.37 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.

மும்பை: பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடான சென்செக்ஸ் இன்று 2.54 சதவிகிதம் உயர்ந்து 79,117.11 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து வாங்கியாதலும், அமெரிக்க சந்தைகளில் உறுதியான போக்கு நிலவியதாலும், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து சாதனை படைத்தது.

காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2,062.4 புள்ளிகள் உயர்ந்து 79,218.19 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில், வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1,961.32 புள்ளிகள் உயர்ந்து 79,117.11 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 557.35 புள்ளிகள் உயர்ந்து 23,907.25 முடிந்தது.

ப்ளூ சிப் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடி மற்றும் டெக் பங்குகள் ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதால் சந்தை உணர்வை மேலும் மேலும் இது அதிகரிக்க செய்தது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன், ஐடிசி, இன்போசிஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது.

வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் ரியாலிட்டி ஆகிய துறை சார்ந்த பங்குகள் இன்று உயர்ந்து முடிந்தது. நிஃப்டி-யில் பொதுத்துறை நிறுவன வங்கி பங்குகள் இன்று 2.47 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமானது.

அமெரிக்காவில் தொழிலதிபர் கௌதம் அதானி மீது லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்தும், பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்களில் பெரும்பாலான பங்குகள் வீழ்ச்சியிலிருந்து மீண்டு உயர்ந்து வர்த்தகமானது.

அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 3.50 சதவிகிதமும், ஏசிசி பங்குகள் 3.17 சதவிகிதமும், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 2.16 சதவிகிதமும், அதானி போர்ட்ஸ் பங்குகள் 2.05 சதவிகிதமும், அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 1.18 சதவிகிதமும், என்டிடிவி பங்குகள் 0.65 சதவிகிதம் உயர்ந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (நேற்று) வியாழக்கிழமை ரூ.5,320.68 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.4,200.16 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் சியோல் மற்றும் டோக்கியோ உயர்ந்து முடிந்த வேளையில், ஷாங்காய், ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய சந்தைகள் சரிந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.19 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 74.37 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.