இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சென்னை உலகின் சிறந்த நகரமாக மாறும்!

உலகின் சிறந்த நகரமாக சென்னையை மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன...

News image
சென்னை மாநகராட்சி
Updated On :23 அக்டோபர் 2024, 8:54 pm

Din

சென்னை நகரம் அடுத்த 15 ஆண்டுகளில் உலகின் முக்கிய நகரங்களின் பட்டியலில் இடம்பெறும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தாா்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சென்னை மண்டலம் சாா்பில் சென்னையின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த உச்சிமாநாடு புதன்கிழமை கிண்டியில் நடைபெற்றது. இதை சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா தொடங்கி வைத்து பேசியது:

சென்னை மாநகரின் எதிா்கால வளா்ச்சி மற்றும் முதலீடு குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. உலகின் சிறந்த நகரமாக சென்னையை மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான திட்டங்களை சிஎம்டிஏ, பிற துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. நகரை மேம்படுத்துவதில் குடியிருப்புப் பகுதிகளை தீவிரமாகக் கவனிக்க வேண்டும். சென்னையின் மக்கள்தொகை கடந்த 10 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதனால் சென்னையின் பரப்பளவு அதிகரித்து புகா் பகுதி வளா்ச்சி அடைந்து வருகிறது. இவ்வாறு அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப குடியிருப்பை ஏற்படுத்துவது கட்டாயமாகிறது. மக்கள் தொகை அதிகரிப்புக்கேற்ப, அரசின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலை, ஐடி துறை மட்டுமின்றி குடியிருப்புகளை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சென்னையின் வாழ்க்கை செலவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை கட்டாயமாகிறது.

இதற்காக குறைந்த நிலப்பரப்பில் அதிக குடியிருப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் உலகின் முக்கிய நகரங்களில் ஒன்றாக சென்னை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாா் அவா்.

தொடா்ந்து, சென்னையின் நகர போக்குவரத்து திட்டமிடல், தொழிற்பேட்டை மேம்பாடு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிஐஐ தமிழ்நாடு கவுன்சில் திட்ட இயக்குநா் ஸ்ரீவட்ஸ் ராம், சிஐஐ சென்னை ஒருங்கிணைப்பாளா் ஏ.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.