மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அறியாமல் செய்த தவறுக்கு பரிகாரம் 'மிளகா'

ஸ்ரீநடராஜா ஆர்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் 'மிளகா'. இதில் பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். பூங்கொடி, சுஜா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குநர்கள் ஜெ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:28 pm

தினமணி

ஸ்ரீநடராஜா ஆர்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் 'மிளகா'. இதில் பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். பூங்கொடி, சுஜா ஆகியோர்

கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குநர்கள் ஜெகன், சிங்கம்புலி, ஜி.எம்.குமார், 'நான் கடவுள்' ராஜேந்திரன், பாண்ஸ், ஆரோக்கியதாஸ், மாயி சுந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குபவர் ரவிமரியா. படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது...

''அறியாமல் செய்த தவறுக்கு பரிகாரம் செய்ய முயல்வது மனித இயல்பு. இதை மையமாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறோம். இதில் நாயகன், மிளகாய் வியாபாரியாக நடிக்கிறார். படத்தின் முதல் ஹீரோ மதுரை காவல் தெய்வம் கருப்பணசாமி. இரண்டாவது ஹீரோ கதை. மூன்றாவதாகத்தான் நட்ராஜ். மிளகாயை தனியாக சாப்பிட்டால் காரமாக இருக்கும். அதே மிளகாயை சில காய்கறிகளுடன் சரியான அளவில் பக்குவமாக சமைத்துச் சாப்பிட்டால் ருசியாக இருக்கும். இந்தக் கதையின் நாயகனுடைய இயல்பும் அப்படித்தான். தனியாக இருக்கும்போது முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் நாயகன் அவனுடைய நண்பர்கள் வட்டாரத்தில் நல்லவனாக இருக்கிறான். முழு படத்தையும் மதுரையில் படமாக்கியிருக்கிறோம். இதில் மதுரை மக்களின் நக்கல்,

நையாண்டியை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறோம். பாடல்கள் சூப்பர் ஹிட்

ஆகியுள்ளன. படம் சிறப்பாக வந்துள்ளதைப் பார்த்து, விநியோக உரிமையை கலைப்புலி எஸ்.தாணு வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். மேலும் இந்தப் படத்தைத் தெலுங்கிலும் தயாரிக்கிறார்'' என்றார் இயக்குநர் ரவிமரியா.

இசை - சபேஷ்-முரளி. பாடல்கள் - விவேகா, ஏக்நாத், நந்தலாலா, தமிழமுதன்.

ஒளிப்பதிவு - பாலாஜி வி.ரங்கா. படத்தொகுப்பு - ஜெய்சங்கர். தயாரிப்பு - சூஜித் சர்க்கார், என். ஷியாம்சுந்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.