டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்! பட்ஜெட்டில் அறிவிப்பு!

திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது பற்றி...

News image

திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும் என அறிவிப்பு - TNDIPR

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:36 am IST

திருப்பூரில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

2026 - 2027-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் என். மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார்.

இதில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆடை உற்பத்திக்கு ஊக்குவிக்க பல கட்டங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, 'திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்' அமைக்கப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.

இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜவுளி, ஆடை மற்றும் கைவினைத் துறையில் வடிவமைப்பு, புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த மையம் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு பட்ஜெட்டில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறைக்கு 1,678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Summary

Tiruppur Textile Technology Centre at a cost of Rs. 10 crore - Announcement in the budget

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.