ஆனந்த் சங்கர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் ‘நோட்டா’. படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர்கள் வெளிவந்த சமயத்தில் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய படமிது. விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் இப்படம் வெளியானது.
நோட்டாவுடன் அதே சமயத்தில் வெளியான 96, ராட்சசன் மற்றும் செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களும் வெளிவந்தன. மற்ற படங்கள் அதிகளவு ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், நோட்டா கவனம் பெறாமல் போனதுடன் எதிர்மறையாகவும், கலவையான விமரிசனங்களை பெற்றது. இது குறித்து தனது ட்விட்டரில் விஜய் தேவரகொண்டா பதிவிட்டது.
நோட்டோ படத்தைப் பார்த்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படம் சில ரசிகர்களால் சரியாக வரவேற்கப்படவில்லை. நான் அதற்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை. அதற்காக நான் பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கிறேன். இந்த படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களை கேட்டேன். இது எனக்கு ஒரு பாடம். நான் கணக்கிட்ட சில விஷயங்கள் தவறாகிவிட்டன. வெற்றியோ, தோல்வியோ அது நான் யார் என்பதை நிச்சயம் பாதிக்காது. என் தோல்விகளை கொண்டாடுபவர்கள். நன்றாக கொண்டாடிக் கொள்ளுங்கள். நான் மீண்டும் வெற்றியுடன் வருவேன் என்று கூறியிருந்தார்.