மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மதுரை வீரனை அருந்ததியராகவே காட்டுவதில் யாருக்கென்ன நஷ்டம்?!

அருந்ததியர்களுக்கு வீரம் இருக்கக்கூடாது? அல்லது அருந்ததியர்கள் வீரமானவர்களாக இருக்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

News image
Updated On :31 டிசம்பர் 2018, 3:20 pm IST

இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் மேற்கண்ட கேள்வியை எழுப்பி இருந்தார். தமிழ் நாட்டார் கதைகளில் ஒன்றான மதுரை வீரன் கதையைப்
பொருத்தவரை அவர் வளர்ப்பால் மட்டுமே அருந்ததியராகக் காட்டப்பட்டிருப்பார். பிறப்பால் அவரொரு அரசகுமாரனென்று நாட்டார் இலக்கியங்கள் இதுவரை சித்தரித்து வந்திருக்கின்றன. இதை நிஜமென்று நம்பக்கூடிய நிலையில் தான் நாம் இன்று வரை இருந்து வருகிறோம். இது பொய். மதுரை வீரன் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்து கொண்டு வீரனாக இருப்பதில் கலைத்துறையைச் சார்ந்த ஆதிக்க ஜாதியினருக்கு என்ன நஷ்டம்? அவரை ஏன் அரச குமாரனாகப் பிறந்து அருந்ததியப் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டவராக மட்டுமே காட்டியாக வேண்டிய நிர்பந்தம் என்ன? அருந்ததியர்களுக்கு வீரம் இருக்கக்கூடாது? அல்லது அருந்ததியர்கள் வீரமானவர்களாக இருக்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். நியாயமான கேள்வி தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.