இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் மேற்கண்ட கேள்வியை எழுப்பி இருந்தார். தமிழ் நாட்டார் கதைகளில் ஒன்றான மதுரை வீரன் கதையைப்
பொருத்தவரை அவர் வளர்ப்பால் மட்டுமே அருந்ததியராகக் காட்டப்பட்டிருப்பார். பிறப்பால் அவரொரு அரசகுமாரனென்று நாட்டார் இலக்கியங்கள் இதுவரை சித்தரித்து வந்திருக்கின்றன. இதை நிஜமென்று நம்பக்கூடிய நிலையில் தான் நாம் இன்று வரை இருந்து வருகிறோம். இது பொய். மதுரை வீரன் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்து கொண்டு வீரனாக இருப்பதில் கலைத்துறையைச் சார்ந்த ஆதிக்க ஜாதியினருக்கு என்ன நஷ்டம்? அவரை ஏன் அரச குமாரனாகப் பிறந்து அருந்ததியப் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டவராக மட்டுமே காட்டியாக வேண்டிய நிர்பந்தம் என்ன? அருந்ததியர்களுக்கு வீரம் இருக்கக்கூடாது? அல்லது அருந்ததியர்கள் வீரமானவர்களாக இருக்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். நியாயமான கேள்வி தான்!