தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

நடிகர் விஷாலுக்கு விரைவில் 'டும்டும்’

‘செல்லமே’ என்ற படத்தின் மூலம் கோலிவுட் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஷாலுக்கு விரைவில்

News image
Updated On :31 டிசம்பர் 2018, 11:55 am IST


 
‘செல்லமே’ என்ற படத்தின் மூலம் கோலிவுட் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சண்டைக்கோழி உள்ளிட்ட பல படங்கள் அவரை தமிழ் திரையுலகில் நிலைநிறுத்தியது. திரைப்பட தயாரிப்பாளராகவும் மாறியவர், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் வளர்ந்தார். 'துப்பறிவாளன்', 'பாண்டியநாடு', 'ஆம்பள' உள்ளிட்ட பல படங்களில் நடித்தும், தயாரித்துமுள்ளார் விஷால். தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் முடிந்து, அதில் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே கூறியிருந்த விஷாலுக்கு அண்மையில் அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை விஷாலுக்குத் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர். விஷாலும் சம்மதம் தெரிவிக்கவே, தை மாதத்தில் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. அன்று திருமண தேதியையும் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.