டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வரி விலக்கு அறிவிப்பை ஏற்க மறுத்தது ‘நடிகையர் திலகம்’ தயாரிப்பாளர் குழு!

முதல்வர் தங்களது திரைப்படத்துக்கு அளித்த வரி விலக்கை மாநிலத்தின் விரிவாக்கப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டால் தான் மேலும் மகிழ்ச்சியுறுவதாகவும்

News image
Updated On :26 மே 2018, 5:30 pm IST

தெலுங்கில் மகாநடீ... தமிழில் நடிகையர் திலகம் எனும் பெயரில் மே 11 ஆம் தேதி வெளியான பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கைச் சித்திர திரைப்படத்துக்கு வரிவிலக்கு அறிவித்திருந்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு! 

நடிகையர் திலகம் படப்பிடிப்புக் குழுவினரை தனது முதல்வர் அலுவலகத்துக்கே வரவழைத்து, திரைப்படத்துறையில் மறக்க முடியாத பங்களிப்பைச் செய்தவரான நடிகை சாவித்ரியின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கி எதிர்வரும்  தலைமுறையினருக்கும் சாவித்ரி குறித்து அறியச் செய்தமைக்காக பாராட்டுகளையும், விருதுகளையும், நன்றியையும் தெரிவித்த சந்திரபாபு நாயுடு தமது பாராட்டின் உச்சகட்டமாக ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்தார். 

மக்களை இத்திரைப்படத்தை நோக்கி மேலும் தியேட்டருக்கு இழுக்கவே இம்முயற்சி. இதை அறிந்து மகாநடி திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத், ப்ரியங்கா தத் இருவரின் தந்தையும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளருமான அஸ்வினி தத், சந்திரபாவு நாயுடுவின் வரி விலக்கு அறிவிப்பு குறித்து தனது மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் அவர் ஊடகங்களில் பேசிய போது, சந்திரபாபு நாயுடு புதிய ஆந்திர மாநிலத்தைத் திறம்பட உருவாக்க எத்தனை கடின முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பதை இந்த நாடறியும். அவரது பாராட்டுகளும், விருதுகளும் வரி விலக்கு அறிவிப்பும் தனக்கு மிகுந்த பெருமித உணர்வை அளித்தாலும் கூட ஒரு புதிய மாநிலத்தை நிர்மாணிக்கும் கடினமான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு திறமையான முதல்வரைப் பெற்றிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியே போதுமானது என்றும். முதல்வர் தங்களது திரைப்படத்துக்கு அளித்த வரி விலக்கை மாநிலத்தின் விரிவாக்கப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டால் தான் மேலும் மகிழ்ச்சியுறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவித்த வரிவிலக்கு அறிவிப்பை தாழ்மையுடன் மறுத்ததோடு நடிகையர் திலகம் திரைப்படத்தை தயாரித்ததற்காக தனது மகள்களான ஸ்வப்னா தத், ப்ரியங்கா தத் இருவரையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டியது குறித்து தான் மிகப்பெருமையாக உணர்வதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் அஸ்வினி தத்.

Related Article

பிக் பாஸ் 2 டப்பிங்கில் பேசியது யார்?

விரைவில் இயக்குநராகிறார் அரவிந்த் சாமி!

கேன்ஸ் திரைவிழாவில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி! உணர்ச்சி வசப்பட்டார் நடிகர் தனுஷ்!

ரஜினியின் காலா படத்திலிருந்து ஒரு காட்சி!

இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடக்கவிருந்த 'விஜய் அவார்ட்ஸ்’ ரத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.