சென்னை: அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி பேசிருமோ? என்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி காட்டமாக விமர்சித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.
இம்முறை மூன்றாவது சீசனில் ஆரம்பத்திலேயே போட்டியாளர்கள் நிறைய சோக கதைகளுடன் அழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி பேசிருமோ? என்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:
போதும்பா விட்ருங்கப்பா... இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிளியபோறீங்க... இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை... இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு...
இதே சேனல் ல "கதையல்ல.. னு" சொல்லி ஒரு நிகழ்ச்சி.... வந்தவங்களை அமுக்கி பிடிச்சு கட்டாயமா அழவைப்பாங்க... அதுல ஆரமிச்சது... எல்லா ப்ரோக்ராம்லயும் அழுவாச்சி பிளாஷ்பேக் !
எங்க பிளாட்ஸ் ல எல்லா வீட்டுலயும் குழந்தைகளாம் பாக்குறாங்க.... குழந்தைங்க பாக்குற நிகழ்ச்சியா இது? Parents, be responsible !
இவ்வாறு அவர் கூறியுள்ளார். அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது போட்டியாளர்களிலொருவரான இலங்கைத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் லோஸ்லியா ஆகும்.