சிபிஐ விசாரணை வேண்டும்: நடிகை ரியா கோரிக்கை

என்ன காரணத்துக்காக இந்த முடிவை சுசாந்த் சிங் எடுத்தார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்...
சிபிஐ விசாரணை வேண்டும்: நடிகை ரியா கோரிக்கை
Updated on
1 min read

சுசாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நடிகை ரியா கோரிக்கை வைத்துள்ளார்.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில் சுசாந்தின் நெருங்கிய தோழியான நடிகை ரியா சக்ரபோர்தி, சுசாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டகிராமில் அவர் எழுதியுள்ளதாவது:

மரியாதைக்குரிய அமித் ஷா அவர்களுக்கு, நான் சுசாந்த் சிங்கின் கேர்ள் பிரெண்ட். சுசாந்த் மரணமடைந்து ஒரு மாதமாகிவிட்டது. எனக்கு அரசின் மீது முழு நம்பிக்கை உள்ளது. எனினும் நீதியை நிலைநாட்டுவதற்காக சுசாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். என்ன காரணத்துக்காக இந்த முடிவை சுசாந்த் சிங் எடுத்தார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுசாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான். 

தில் பேச்சாரா, ஜூலை 24 அன்று ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுசாந்த் சிங்குக்காக இந்தப் படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com