நிலா அது வானத்து மேலே பாடலை பெங்காலி மொழியில் பக்தி பாடலாக வெளியாகி வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்தில் இடம் பெற்ற நிலா அது வானத்து மேலே பாடல் மிகவும் பிரபலம். இந்தப் பாடல் இன்றைய தலைமுறையினரும் ரசிக்கக் கூடிய பாடலாக இருந்து வருகிறது.
இந்தப் பாடலின் பின்னணி குறித்து ஒரு கதை சொல்லப்படுவது உண்டு. நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டி சீமையிலே பாடல் சூழ்நிலைக்காக இளையாராஜாவால் உருவாக்கப்பட்ட இசை தான் நிலா அது வானத்து மேலே பாடல்.
இதையும் படிக்க | எப்படி இருக்கிறது அரண்மனை 3? : திரைப்பட விமரிசனம்
ஆனால் மணிரத்னத்துக்கு இசை பிடித்திருந்தாலும் அந்த சூழ்நிலைக்கு அந்தப் பாடல் பொருத்தமாக இல்லாதது போல் தோன்றியிருக்கிறது. அப்போது தென்பாண்டி சீமையிலே பாடலுக்கான இசை இளையராஜாவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் நிலா அது வானத்து மேல இசையையும் நன்றாக நடனமாடக் கூடிய பாடலாக உருவாக்கி தருமாறு இளையராஜாவை கேட்டிருக்கிறார் மணிரத்னம். அப்படி உருவானது தான் நிலா அது வானத்து மேலே பாடல். இந்த நிலையில் இந்தப் பாடலின் இசையைக் கொண்டு பெங்காலி மொழியில் நவராத்திரி சிறப்பாக பக்தி பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை உஷா உதுப் பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீரனூரில் போட்மெயில் விரைவு ரயில் நின்றுசெல்ல எதிா்பாா்ப்பு

புனரமைத்தும் பூட்டிக்கிடக்கும் உடற்பயிற்சிக் கூடம்! பயன்பாட்டுக்கு கொண்டுவர எதிா்பாா்ப்பு

திண்டுக்கல் மாநகாரட்சிப் பகுதியில் 4 இடங்களில் ‘ஸ்பாஞ்ச்’ பூங்காக்கள்!







