மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

''விஜய் சாரும் லோகேஷ் சாரும் இல்லனா, இது நடந்திருக்காது'' - அர்ஜுன் தாஸ் உருக்கம்

விஜய் சார் மற்றும் லோகேஷ் சார் இருவரும் இல்லையென்றால் எனக்கு ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்திருக்காது என்று அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :2 ஜூலை 2022, 6:50 am

DIN

விஜய் சார் மற்றும் லோகேஷ் சார் இருவரும் இல்லையென்றால் எனக்கு ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்திருக்காது என்று அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார். 

கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த அர்ஜூன் தாஸ் தற்போது ஹிந்தி படமொன்றில் நாயகனாக நடித்துவருகிறார். மலையாளத்தில் விமர்சன ரீதியாக பெறும் வரவேற்பை பெற்ற லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் அங்கமாலி டைரிஸ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். 

இந்தப் படத்தை கேடி என்கிற கருப்பு துரை பட இயக்குநர் மதுமிதா இயக்குகிறார்.  இந்தப் படத்தில் நடிப்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை அர்ஜுன் தாஸ் வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஜய்க்கும் இயக்குநர் லோகேஷிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், என்னுடைய முதல் ஹிந்தி படம். எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. இதனை எழுதும்போது பல்வேறு உணர்வுகள் வெளிப்படுகின்றன. 

முதலில் விஜய் சாருக்கும், இயக்குநர் லோகேஷுக்கும் பெரிய நன்றி. நான் இதனை முன்பே சொல்லியிருக்கிறேன். தற்போது மீண்டும் சொல்கிறேன். உங்கள் இருவருக்கும் எப்பொழுதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

பலருக்கு நான் ஏன் இருவருக்கும் நன்றி சொல்கிறேன் என ஆச்சரியமாக இருக்கும். காரணம் மாஸ்டர் படம் இல்லையென்றால் எனக்கு இந்த வேடம் கிடைத்திருக்காது. அதனால் லோகேஷ் சார், விஜய் சார் மற்றும் ஒட்டுமொத்த மாஸ்டர் படக்குழுவுக்கும் நன்றி. 

இந்தப் படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது முதலில் என்னுடைய பெற்றோர், இயக்குநர் லோகேஷ் சார் மற்றும் விஜய் சார் ஆகியோரிடம் தான் தெரிவித்தேன். 

என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி மதுமிதா மேம். இந்த வாய்ப்புக்காக விக்ரம் சாருக்கு நன்றி. உங்கள் நிறுவனத்துடன் பணிபுரிவது பெறுமை. கத்தி படம் முதல் எனக்கு ஆதரவளித்துவரும் பத்திரிக்கை நண்பர்கள், ஊடகத்தினர் மற்றும் பர்வையாளர்களுக்கு நன்றி. நான் உங்கள் ஆசிர்வாதங்களுடன் இந்த அழகான பயணத்தை தொடர்கிறேன். உங்களை பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.