மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'இது எனக்கு வந்த படம்': உண்மையை உடைத்த உதயநிதி; ஷாக் ஆன சிவகார்த்திகேயன்!

டான் திரைப்படம் முதலில் தனக்கு வந்த கதை என படத்தின் வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

News image
Updated On :6 ஜூன் 2022, 4:32 pm

DIN


டான் திரைப்படம் முதலில் தனக்கு வந்த கதை என படத்தின் வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்த டான் திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் அள்ளி வருகிறது.

இதன் வெற்றி விழா இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

"இது டாக்டர் திரைப்படத்தின் வசூலை முந்தும் என பாடல் வெளியீட்டு விழாவில் கூறியிருந்தேன். அது தற்போது நடந்திருக்கிறது. அந்த சாதனையை 3 வாரங்களிலேயே டான் முறியடித்திருக்கிறது.

இது வெற்றி விழா என்பதனால், நிறைய உண்மைகளைக் கூறலாம் என நினைக்கிறேன். இந்தப் படத்தை முதலில் நாங்கள் ஒரு நான்கு பேர் (ரெட் ஜெயன்ட்) பார்த்தோம்.

முதல் பாதியைப் பார்த்து இது நகைச்சுவையாக இருக்கிறதா, சிரிப்பு வருகிறதா எனக் கேட்டு நாங்கள் ஒருமாதிரி ஆகிவிட்டோம். பிறகு, இரண்டாம் பாதி படத்தைப் பார்த்தோம்.

கடைசி ஒருமணி நேரம் அப்பா, மகன் உறவு மிகவும் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தப் படம் ஓடும் என்று சொன்னேன். சொன்னதைப்போல தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறார்கள். அதற்கு நன்றி.

இன்னொரு உண்மை சொல்கிறேன். இந்தக் கதையை வேறு ஒரு ஹீரோ கேட்டு நிராகரித்திருக்கிறார். அந்த ஹீரோ நான்தான்.

ஆனால், இது எனக்கு மறந்துவிட்டது. இந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது. பள்ளிக்கூட காட்சிகள் என்னால் செய்ய முடியாது. அதனால், இதை நான் செய்யவில்லை. பிறகு அப்பா, மகன் உணர்வுகள் நிச்சயம் எனக்கு வந்திருக்காது" என்றார் உதயநிதி ஸ்டாலின்.

இதன்பிறகு, சிவகார்த்திகேயன் பேசுகையில், " உதய் சார். உங்களுக்குக் கதை சொன்னதை அவர் (இயக்குநர்) என்னிடம் சொல்லவில்லை. மற்றவர்களிடம் கதை சொன்னதையெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால், இதை மட்டும் சொல்லவில்லை" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.