தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சிரஞ்சீவி-சல்மான் நடிக்கும் காட்ஃபாதர்: டிஜிட்டல் உரிமம் 57 கோடியா? 

சிரஞ்சீவி-சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் காட்ஃபாதர் படத்தின் டிஜிட்டல் உரிமம் 57 கோடிக்கு விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :20 செப்டம்பர் 2022, 5:53 pm IST

சிரஞ்சீவி-சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் காட்ஃபாதர் படத்தின் டிஜிட்டல் உரிமம் 57 கோடிக்கு விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தமிழ் இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளப் படமான லுசிஃபர் படத்தின் ரீமேக் இது. இசை - தமன். ஒளிப்பதிவு - நிரவ் ஷா.

இப்படத்தில் சிறிய வேடத்தில் சல்மான் கான் நடிக்கிறார். சமீபத்தில் முதல் பாடலின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதில் சிரஞ்சீவி சல்மான் இருவரும் இணைந்து இருக்கிறார்கள் என்பதே சிறப்பு. சல்மான் கான் இந்த படத்தில் சிரஞ்சீவியின் தம்பியாக நடித்துள்ளார். 

தற்போது, படத்தின் டிஜிட்டல் உரிமம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிக்காக ரூ. 57 கோடி நெட்பிளிக்ஸ் விலை பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. 

இந்தப் படம் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.