விசாரணை அதிகாரியை மிரட்டியதாக நடிகர் திலீப் மீது வழக்குப்பதிவு

பிரபல மலையாள நடிகர் திலீப் மீது விசாரணை அதிகாரியை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் திலீப்
நடிகர் திலீப்

பிரபல மலையாள நடிகர் திலீப் மீது விசாரணை அதிகாரியை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் திலீப் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கேரளம் முழுவதும் பெரிய அதிர்வை ஏற்படுத்திய அந்த வழக்கின் விசாரணை தற்போது நடந்து வரும் நிலையில் நடிகர் திலீப் , அவருடைய சகோதரி உள்ளிட்ட 6 பேர்  விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகக் கூறி அவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ்ஜியம் திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடிகர் திலீப்  நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com