பிரபல மலையாள நடிகர் திலீப் மீது விசாரணை அதிகாரியை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் திலீப் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கேரளம் முழுவதும் பெரிய அதிர்வை ஏற்படுத்திய அந்த வழக்கின் விசாரணை தற்போது நடந்து வரும் நிலையில் நடிகர் திலீப் , அவருடைய சகோதரி உள்ளிட்ட 6 பேர் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகக் கூறி அவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ்ஜியம் திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடிகர் திலீப் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க| பொங்கலுக்கு தமிழில் வெளியாகும் 8 படங்கள் - விவரம் இதோ