திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

தேசிய விருதுகளை அள்ளிய அய்யப்பனும் கோஷியும் படம்

மறைந்த இயக்குநர் சச்சி இயக்கிய அய்யப்பனும் கோஷியும் என்கிற மலையாளப் படத்துக்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. 

News image

அய்யப்பனும் கோஷியும் படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் சச்சி (இடது)

Updated On :22 ஜூலை 2022, 5:12 pm IST

மறைந்த இயக்குநர் சச்சி இயக்கிய அய்யப்பனும் கோஷியும் என்கிற மலையாளப் படத்துக்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. 

2020-ம் வருடம் பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படமான அய்யப்பனும் கோஷியும் ஏராளமான ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. பிரிதிவிராஜ், பிஜு மேனன் நடிப்பில் சச்சி இயக்கிய படம் இது. ஆனால் அடுத்த ஐந்து மாதங்களில் இயக்குநர் சச்சி 48 வயதில் காலமானார். அய்யப்பனும் கோஷியும் போன்ற பல தரமான படங்களைத் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவருடைய திடீர் மரணம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியது.

இந்நிலையில் திரைப்படத் தேசிய விருதுகளுக்கான அறிவிப்பு இன்று வெளியானது. சிறந்த இயக்குநராக அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக சச்சிக்கு அறிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருதை இப்படத்தில் நடித்த பிஜு மேனன் பெற்றுள்ளார்.

இதுதவிர மேலும் இரு விருதுகள் இப்படத்துக்குக் கிடைத்துள்ளன. சிறந்த பாடகிக்கான விருது நஞ்சம்மாவுக்கும் சிறந்த சண்டை இயக்கத்துக்கான விருது இப்படத்தில் பணியாற்றிய ராஜசேகர், மாஃபியா சசி, சுப்ரீம் சுந்தர் ஆகியோருக்கும் கிடைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.