ராவணனாக நடிக்கும் கே.ஜி.எஃப் யாஷ்!

பிரபல இந்தி இயக்குநரின் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் ராவணனாக நடிக்கிறார் கேஜிஎஃப் யாஷ்
ராவணனாக நடிக்கும் கே.ஜி.எஃப் யாஷ்!
Published on
Updated on
1 min read

பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி ராமாயணக் கதையை 3 பாகங்களாக திரைப்படமாக இயக்க உள்ளார். இதில் ராமனாக ரன்பீர் கபூரும், ராவணனாக கேஜிஎஃப் யாஷும் நடிக்க இருக்கின்றனர். 

சீதையாக சாய்பல்லவி நடிக்க இருக்கிறார். முதலில் ஆலியா பட் சீதையாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அவர் விலகியதை தொடர்ந்து சாய்பல்லவி சீதையாக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்குகிறது. நடிகர் யாஷ் ஜூலை மாதம் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படவுள்ளன.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு யாஷ் ரூ.150 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் கால்ஷீட் எத்தனை நாள் தேவைப்படுகிறது என்பதைப் பொருத்து சம்பளம் மாறக்கூடும் என பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

2022-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த கேஜிஎஃப்-2 படத்தினை அடுத்து யாஷ் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com