மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குக் வித் கோமாளியில் வைல்டு கார்டு சுற்றில் நுழைந்தது யார்?

குக் வித் கோமாளியில் வைல்டு கார்டு சுற்றில் நுழைந்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2023, 10:38 am

DIN

குக் வித் கோமாளியில் வைல்டு கார்டு சுற்றில் நுழைந்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கோமாளிகளாக புகழ், சுனிதா, தங்கதுரை, சிங்கபூர் தீபன், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

குக்குகளில் கிஷோர் ராஜ்குமார், ராஜ ஐயப்பா, விஜே விஷால், காளையன், ஷெரின், கஜேஷ், ஆன்ட்ரியன் வெளியேறியுள்ள நிலையில், தற்போது சிவாங்கி, விசித்ரா, மைம் கோபி, சுருஸ்டி, கிரண் ஆகியோர் குக்குகளாக பங்கேற்று வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் விசித்ரா முதல் இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் நடைபெற்ற அரை இறுதிச் சுற்றில் இரண்டாவது  இறுதிப் போட்டியாளராக மைம் கோபியும், மூன்றாவது இறுதிப் போட்டியாளராக சிவாங்கியும், நான்காவது இறுதிப் போட்டியாளராக சுருஸ்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும், யாரும் எதிர்பாராத விதமாக கிரண் ஐந்தாவது  இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த நிலையில், வைல்டு கார்டு சுற்றின் மூலம் ஆன்ட்ரியன் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த எலிமினிஷென் சுற்றில் ஆன்ட்ரியன் வெளியேறிய நிலையில், அவர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.