தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

67 வயதில் 10-ம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகும் நடிகர்!

67 வயதான மலையாள குணச்சித்திர நடிகர் மீண்டும் தனது படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

News image

நடிகர் இந்திரன்ஸ்

Updated On :2 பிப்ரவரி 2024, 8:54 am IST

கல்விக்கு வயது அவசியமில்லை என்பது மலையாள நடிகர் இந்திரன்ஸ் செயலால் மற்றுமொரு முறை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இளமையில் வறுமையைச் சந்தித்ததால் அவரால் தொடர்ந்து படிக்க இயலவில்லை. நான்காம் வகுப்பு வரை படித்தவர், அதன் பிறகு பல்வேறு வேலைகளைப் பார்த்துள்ளார்.

1981-ல் துணி தைக்கும் நிலையத்தில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆடை வடிவமைப்பில் வேலை செய்தவர், அதன் பிறகு நடிகராகத் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார். 40 வருடங்களுக்கு மேலாகத் திரைத்துறையில் நடிகராக வலம்வருகிறார்.

மாநில அரசின் பல்வேறு விருதுகள், தேசிய விருது ஆகியவற்றை வென்றுள்ள இந்திரன்ஸ் தற்போது இளமையில் விட்டுப் போன படிப்பைத் தொடர முடிவு செய்து படித்து வருகிறார். 

தனது வீட்டிற்கு அருகிலுள்ள அரசுப் பள்ளியில் வார இறுதி வகுப்புகளுக்குச் சென்று பத்தாம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.

படிப்பு இல்லாதது என்பது கண் பார்வை இல்லாததற்குச் சமம் எனச் சொல்லும் இவர், நடிகர் ஆசிப் அலி நடிக்கும் ஒட்டா படத்தில் நடித்துள்ளார். புள்ளி, நுனா, நடிகர் திலகம் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் இந்திரன்ஸ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.