இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துவரும் தொடரின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதிமுதல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதற்காக ஏற்கெனவே ஈரமான ரோஜாவே -2 தொடர் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்பட்டது. இதேபோன்று தற்போது எஸ்.ஏ. சந்திரசேகர் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் கிழக்கு வாசல் தொடரில் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7 முதல் விஜய் தொலைக்காட்சியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாகி வந்த நிலையில் இனி மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதிமுதல் இந்த நேர மாற்றத்தில் கிழக்கு வாசல் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி - புகைப்படங்கள்

சவுக்கு சங்கர் ஆந்திரத்தில் கைது!

அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பாக மாறும்: இபிஎஸ் பிரசாரம்!

கடலூரில் விஜய் பிரசாரம் நடைபெறுமா? புதுவை தேர்தலால் ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


