சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கும் தொடரின் நேரம் மாற்றம்!

இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துவரும் தொடரின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :24 செப்டம்பர் 2023, 6:42 pm IST


இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துவரும் தொடரின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதிமுதல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 

இதற்காக ஏற்கெனவே ஈரமான ரோஜாவே -2 தொடர் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்பட்டது. இதேபோன்று தற்போது எஸ்.ஏ. சந்திரசேகர் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் கிழக்கு வாசல் தொடரில் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

Story image

கடந்த ஆகஸ்ட் 7 முதல் விஜய் தொலைக்காட்சியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாகி வந்த நிலையில் இனி மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதிமுதல் இந்த நேர மாற்றத்தில் கிழக்கு வாசல் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.