27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

அன்பே வா தொடர் நிறைவடைந்தது.

News image
Updated On :28 ஏப்ரல் 2024, 1:02 pm IST

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அன்பே வா தொடர் இன்றுடன்(ஏப். 28) நிறைவு பெற்றுள்ளது.

அன்பே வா தொடர் முடிவடையவுள்ளதாக கடந்த இரு மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியான நிலையில், இன்றுடன் நிறைவடைந்தது.

இந்தத் தொடரில் டெல்னா டேவிஸ் நாயகியாகவும், விராட் நாயகனாகவும் நடித்து வந்தனர். தற்போது நாயகியாக டெல்னா டேவிஸ் மாற்றாக ஸ்ரீ கோபிகா நடித்து வருகிறார்.

நவம்பர் 2020 முதல் இந்தத் தொடர் 1000 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருவதால், தொடரை விரைவில் முடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவி வந்தது.

அதேபோல், டிஆர்பியிலும் சற்று பின்தங்கியே இருந்த காரணத்தாலும் அன்பே வா தொடர் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இத்தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் இன்று ஒளிபரப்பப்பட்டது.

இத்தொடரின் நாயகன் விராட்டுக்கு திரைத்துறையை சேர்ந்த நவீனாவுடன் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.