வேட்டையன்: டப்பிங் பணிகளை தொடங்கிய ரித்திகா சிங்!

வேட்டையன் படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகை ரித்திகா சிங் தொடங்கினார்.
நடிகை ரித்திகா சிங்
நடிகை ரித்திகா சிங் படங்கள்: லைகா புரடக்‌ஷன்ஸ் / எக்ஸ்
Published on
Updated on
1 min read

தமிழில் 'இறுதிச்சுற்று' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதனைத் தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்தார்.

சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நடித்திருந்தார். துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் கலாபக்காரன் பாடலில் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்று நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். 

நடிகை ரித்திகா சிங்
நான் அதிர்ஷ்டமில்லாதவரா? கிண்டல்களுக்கு பிரியா பவானி சங்கர் வேதனை!

இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடிகை ரித்திகா சிங்
விடாமுயற்சி படக்குழு பகிர்ந்த புதிய போஸ்டர்! புதிய தோற்றத்தில் ஆரவ்!

இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே இதன் டப்பிங் பணிகளை ஃபக்த் பாசில், துஷாரா விஜயன் முடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com