
நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் நேற்று (ஆக.15) திரையரங்குகளில் வெளியாகியது. .
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நாயகனாக விக்ரம் நடித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இப்படம் நேற்று உலகளவில் வெளியாகி்யது.
கோலார் தங்கச் சுரங்கம், தங்கத்துக்கு யார் சொந்தக்காரர்கள் என்று பூர்வகுடிகளின் கதைகளப் பற்றி பேசியுள்ளது தங்கலான்.
இந்தப் படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி நடித்துள்ளார்கள்.
கலவையான விமர்சனங்களைப் பெறும் தங்கலான் முதல்நாளில் உலகம் முழுவதும் ரூ. 26. 44 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் புரமோஷனுக்காக சென்ற நடிகர் விக்ரம், “ எங்களுக்கு இந்தப் படத்தில் 100 பகங்கள்கூட எடுக்க முடியும். ஆனால், தங்கலான் உங்களுக்கு பிடிப்பதால் நீங்கள் காட்டும் அன்பிற்காக இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க எங்களுக்கும் ஆசை இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் இயக்குநர் எல்லாம் கலந்துரையாடினோம். பா. ரஞ்சித் தனது அடுத்த பட வேலைகளெல்லாம் முடித்துவிட்டால் உடனே இது குறித்து பேசுவோம். அவர் அழைத்தால் உடனே சென்றுவிடுவேன்” எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.