மலையாளத்தில் கடந்த ஆண்டு செப்.28 ஆம் தேதி வெளியான திரைப்படம் கண்ணூர் ஸ்குவாட்.
ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் கிரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது.
தமிழில் வெளியான கார்த்தியின் தீரன் படத்தைப் போன்றே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வடமாநிலம் செல்லும் காவல்துறைக் குழுவைப் பற்றியது கண்ணூர் ஸ்குவாட். நிஜத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவியே இது உருவானது.
மம்மூட்டி கம்பெனி தயாரித்த இப்படம் ரூ.100 கோடியை வசூலித்து அசத்தியது. இது, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான பின் அதிக கவனத்தைப் பெற்றது.
தற்போது, கண்ணூர் ஸ்குவாட் படம் உருவாகக் காரணமாக இருந்த நிஜ காவலர்களைப் படக்குழுவினர் சந்தித்துள்ளனர். கண்ணூர் ஸ்குவாட் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் மம்மூட்டி, அந்தக் காவலர்களை அழைத்து மரியாதை செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கண்ணூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

இந்திய டி20 கேப்டனாக ஷ்ரேயாஸ் தேர்வு..! அணியில் இடம்பிடித்த 15 வயதான சூர்யவன்ஷி!

ஆனந்தம்! 25 ஆண்டுக் கொண்டாட்டம்!

இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ள அனுகுல் ராய்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


