ராக்கி, சாணிக் காயிதம் படங்களின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். 17 வருடங்களாகப் போராடி தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர்.
தற்போது நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தினை இயக்கி இருக்கிறார். இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: நாளைய நாயகிகள்! இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அசத்தும் பெண்கள்!
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: ரசிகர்கள்தான் எனக்கு அப்பா, அம்மா: நடிகர் மகேஷ் பாபு உருக்கம்!
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன், “எனக்குப் பிடித்த படங்களை மட்டுமே இயக்கி வருகிறேன். சமரசங்கள் இருந்தாலும் கேப்டன் மில்லர் எனது படமே. நான் விரைவில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை தொடங்கவிருக்கிறேன். சிறிய பட்ஜெட் படங்களை இயக்க இதை உபயோகித்துக் கொள்வேன். ஏற்கனவே சில கதைகளை எழுதி வைத்திருக்கிறேன். அடுத்தப் படமும் தனுஷ் அவர்களுடன் இயக்க உள்ளேன். இடையே இந்த சிறிய பட்ஜெட் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன்” எனக் கூறினார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தனது ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.