/

வலிமிகுந்த கதை: அயலான் ரிலீஸ் குறித்து சிவகார்த்திகேயன்!

அயலான் படம் வெளியீட்டைக் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பதிவு வைரலாகியுள்ளது.

News image
Updated On :12 ஜனவரி 2024, 6:40 am

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

இயக்குநர் ரவிக்குமாரின் ‘நேற்று இன்று நாளை’ படம் மக்களிடையே வரவேற்பினை பெற்றது. அயலான் அவரது 2வது படம். 

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.  

படம் இன்று வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன், “ஒவ்வொரு வெற்றியாளருக்கும் வலிமிகுந்த கதை இருக்கிறது. ஒவ்வொரு வலிமிகுந்த கதைக்கும் வெற்றிகரமான முடிவிருக்கிறது. வலியை ஏற்றுக்கொண்டு வெற்றிக்கு தயாராகவும். பெரிய திரைகளில் அயலான் வெளியாகியிருக்கிறது. இந்த அனுபவத்தினை உங்கள் குடும்பம் , நண்பர்களுடன் பொங்களை கொண்டாடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.