புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘ஓடாத படத்திற்கு சக்சஸ் மீட்..’ தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சசிகுமார்

சினிமாவில் அடையும் தோல்விகளைப் பலரும் ஒப்புக்கொள்வதில்லை என சசிகுமார் கூறியுள்ளார்.

News image
Updated On :15 ஜூன் 2024, 10:58 am

DIN

நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான் கருடன்.

நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் வணிக வெற்றியைப் பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றது.

கருடன் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் சசிகுமார், “இப்போதெல்லாம் ஓடாத படத்திற்குத்தான் சக்சஸ் மீட் வைப்பார்கள் என பேசுகிறார்கள். அதற்கு காரணம், பலருக்கும் தோல்வி என்றாலே பயம். நாம் தோல்விகளை ஒப்புக்கொள்ள பழக வேண்டும். அப்போதுதான் அடுத்த படத்தில் வெல்ல முடியும். தோல்வியடைந்தால் ஒரே காரணம்தான். வெற்றி பெற்றால் பல காரணங்கள் இருக்கும்.

அப்படி, கருடன் திரைப்படத்தின் வெற்றிக்கு பலரும் காரணமாக இருந்தார்கள். ஆனால், முதல் காரணம் படத்தின் தயாரிப்பாளர்தான். அவர்தான் கருடன் உருவாகவும் நான் இப்படத்தில் இணையவும் முக்கியமானவராக இருந்தார். புரோட்டா சூரி எனும் அடைமொழியையே சூரி அழித்துவிட்டார். இனி கதைநாயகனாக இருக்கும் வரை என்றும் வென்றுகொண்டே இருப்பார்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.