நடிகர் சூரி நடிக்கவுள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து கருடன் படத்தில் கதைநாயகனாக நடித்தார். இப்படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கூடிய நாயகனாக மாறியுள்ளார்.
விடுதலை, கருடன் வெற்றிகளைத் தொடர்ந்து சூரி அடுத்தது எந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சூரியின் அடுத்த படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விலங்கு இணையத் தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தன் 7-வது படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகும் சூரி!
அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

2015 சென்னை வெள்ளத்தைப் படமாக்கும் ரவிக்குமார்?
தன் 7-வது படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகும் சூரி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



