குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ஆவேஷம் படத்தின் இலுமினாட்டி பாடல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :29 மார்ச் 2024, 2:23 pm IST

நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ஆவேஷம் படத்தின் இலுமினாட்டி பாடல் வெளியாகியுள்ளது.

விக்ரம், மாமன்னன் வெற்றிக்குப் பிறகு ஃபக்த் ஃபாசில் தமிழில் மிகவும் பிரபலமான நடிகராக அறியப்பட்டு வருகிறார். மலையாளத்தில் சிறப்பான படங்களை தேர்வு செய்து நடிக்கும் ஃபகத் தமிழ், தெலுங்கில் வில்லனாக நடித்து வருகிறார்.

சென்றாண்டு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற மலையாளப்படம் ரோமன்சம். பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் ஒரு வீட்டில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களே ரோமன்சம். பேய் வரவழைக்கும் ஓஜா போர்ட் விளையாடு அவர்களை எங்கு கொண்டு செல்கிறது என ஜாலியாக எடுக்கப்பட்ட த்ரில்லர் படம். மலையாளம் மட்டுமல்ல தமிழிலும் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரபல மலையாள நடிகர் சௌபின் ஷாகிர், அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் ஜிது மாதவன் இயக்கியிருந்தார். இதில் செம்பன் வினோத் சயீத் எனும் கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

செம்பன் வினோத், “சயீத் கதாபத்திரத்தினை மையப்படுத்தி ஆவேஷம் படம் இருக்கும். இயக்குநரின் கல்லூரியில் நிகழ்ந்த கதையாக இப்படம் இருக்கும்” எனக் கூறியுள்ளார். ரோமன்சம் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலுமினாட்டி எனும் பாடல் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.