மக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் நடந்த நிச்சயதார்தத்துக்கு நடிகை நயன்தாரா வாழ்த்து கூறியுள்ளார்.

News image
Updated On :29 மார்ச் 2024, 1:11 pm IST

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தின் கதாநாயகனாக நடித்தார். முக்கியமான நடிகராக வலம் வந்தவர் அடுத்தடுத்த தோல்விப் படங்களைக் கொடுத்ததால் மார்க்கெட் இழந்தார்.

ஆனால், சித்தா படத்தின் வெற்றிக்குப் பின் நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்தெடுத்துள்ளாராம்.

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “வாழ்கை முழுவதும் இன்பம் பொங்க வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

Story image

DOTCOM

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.