மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எல்.சி.யு.வின் இறுதிப்படம் இதுதான்: லோகேஷ் கனகராஜ்

எல்சியு திரைப்படங்கள் குறித்து பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்...

News image

புகைப்பட உதவி: எக்ஸ்

Updated On :5 நவம்பர் 2024, 10:18 am

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எல்சியுவின் இறுதிப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.

இதுவரை, 5 படங்களை மட்டுமே இயக்கினாலும் லோகேஷ் உருவாக்கும் கதைகளின் மீது ரசிகர்களுக்கு பெரிய ஆர்வம் இருக்கிறது. சில விமர்சனங்களைச் சந்தித்தாலும் படத்தின் மேக்கிங் மற்றும் ஆக்சன் காட்சிகளின் வடிவமைப்பில் திறமையான இயக்குநர் என்றே கருதப்படுகிறார்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், “கூலி திரைப்படத்தை அடுத்தாண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து, கைதி - 2 மற்றும் ரோலக்ஸ் திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளேன். எல்சியுவின் (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) கடைசி படமாக விக்ரம் - 2 திரைப்படம் இருக்கும் என நினைக்கிறேன். விஜய் அண்ணா நடிப்பதிலிருந்து விலகும் முடிவை மாற்றினால் லியோ - 2 படத்தையும் எடுப்பேன்” எனத் தெரிவித்தார்.

விக்ரம் - 2 படத்துடன் எல்சியு முடிவடைகிற தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.