மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

மேடை சரிந்து விபத்து..! பிரியங்கா மோகனுக்கு என்னானது?

நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

News image

பிரியங்கா மோகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் விபத்து..

Updated On :3 அக்டோபர் 2024, 5:45 pm IST

நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

தெலுங்கில் கேஸ்டர் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். தமிழில் டாக்டர் படத்தில் அசத்தினார்.

டான், கேப்டன் மில்லர் படங்களில் கவனம் பெற்றார். தற்போது ஜெயம் ரவியுடன் பிரதர் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் அக்.31ஆம் தேதி வெளியாகிறது.

சரிப்பொதா சனிவாரம் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இன்னொரு தெலுங்கு படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

இந்நிலையில், தெலங்கானாவில் வணிக வளாக திறப்பு நிகழ்வில் நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றார். அதில் பேசிக்கொண்டு இருக்கும்போதே மேடை சரிந்து விழுந்தது.

அதில் இருந்த சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. நடிகை பிரியங்கா மோகன் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

தோரூரில் இன்று நான் கலந்துகொண்ட நிகழ்வில் விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக நான் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினேன் என்பதை எனது நலம்விரும்பிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் காயமுற்றவர்கள் விரைவில் நலமடைய வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன். எனக்கு அக்கறையாகவும் அன்பாகவும் குறுஞ்செய்திகள் அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றிகள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.