நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
தெலுங்கில் கேஸ்டர் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். தமிழில் டாக்டர் படத்தில் அசத்தினார்.
டான், கேப்டன் மில்லர் படங்களில் கவனம் பெற்றார். தற்போது ஜெயம் ரவியுடன் பிரதர் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் அக்.31ஆம் தேதி வெளியாகிறது.
சரிப்பொதா சனிவாரம் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இன்னொரு தெலுங்கு படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
இந்நிலையில், தெலங்கானாவில் வணிக வளாக திறப்பு நிகழ்வில் நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றார். அதில் பேசிக்கொண்டு இருக்கும்போதே மேடை சரிந்து விழுந்தது.
ð à°ªà±à°°à°¿à°¯à°¾à°à° à°®à±à°¹à°¨à± à°ªà±à°°à°®à°¾à°¦à° à°¨à±à°à°à°¿ à°à±à°·à±à°®à°à°à°¾ బయà°à°ªà°¡à±à°¡à°¾à°°à±! #Thorrur #KasamShoppingMall #PriyankaMohan #SafetyFirst https://t.co/p6yXD0V85E pic.twitter.com/gFL91M0Ceb
— SumanTV (@SumanTVTelugu) October 3, 2024
அதில் இருந்த சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. நடிகை பிரியங்கா மோகன் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
தோரூரில் இன்று நான் கலந்துகொண்ட நிகழ்வில் விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக நான் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினேன் என்பதை எனது நலம்விரும்பிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் காயமுற்றவர்கள் விரைவில் நலமடைய வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன். எனக்கு அக்கறையாகவும் அன்பாகவும் குறுஞ்செய்திகள் அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றிகள் என்றார்.
In light of the accident that occurred at an event I had attended in Torrur today, I wanted to let my well wishers know that I'm okay and was lucky to escape with minor injuries.
— Priyanka Mohan (@priyankaamohan) October 3, 2024
My prayers and wishes for a speedy recovery to those who may have suffered any injuries in theâ¦
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாப்ள சீமான்... இதேபோன்ற மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால்...: நயினார் நாகேந்திரன் பேச்சு!

நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி

சிறப்பு விருந்தினராக சித்ரங்கதா சிங்!

பள்ளி மாணவா்களுக்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



