
நகைச்சுவை நடிகராக தன் பயணத்தை தொடங்கிய நடிகர் வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஏராளம்.
சிலகாலம் நடிக்காமல் இருந்து தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் வித்தியாசமாக நடித்து அசத்தியிருந்தார்.
தற்போது, சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவான வின்னர், கிரி, நகரம் படங்களின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்படுகின்றன.
இந்தக் கூட்டணி உறுதியானால் நிச்சயம் வடிவேலுக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகராகவும் நடித்துவரும் சுந்தர். சி தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னொன்று வெளியீட்டுக்கு தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.