தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சுந்தர். சி - வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ்!

நடிகர் வடிவேலுவின் புதிய படத்தின் அறிவிப்பு...

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 12:13 pm IST

நடிகர் வடிவேலு - சுந்தர். சியின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகராக தன் பயணத்தை தொடங்கிய நடிகர் வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஏராளம். சிலகாலம் நடிக்காமல் இருந்துவருக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

காரணம், கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் வித்தியாசமாக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து, ஃபஹத் - வடிவேலு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ’மாரீசன்’ படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.

தற்போது, சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’கேங்கர்ஸ்; எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர். சி இயக்க பென்ஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இது முழு நகைச்சுவை படமாக உருவாகப்படுவதாகத் தகவல்.

Story image

சுந்தர் . சி - வடிவேலு கூட்டணியில் உருவான வின்னர், கிரி, நகரம் படங்களின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்படுகின்றன.

இறுதியாக, சுந்தர்.சி இயக்கிய அரண்மனை - 4 திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.