12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சப்த சாகரதாச்சே எல்லோ இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார்!

பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் அடுத்தப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

Published On :

சமீபத்தில் கன்னடத்தில் சப்த சாகரதாச்சே எல்லோ- சைடு ஏ, சைடு பி என இரண்டு பாகங்களாக திரையரங்குகளில் வெளியான படம் நல்ல வரவேற்பினை பெற்றன. 

தொடர்ந்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பின் இந்திய அளவில் இப்படம் கவனம் ஈர்த்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

Story image

இந்நிலையில் இந்த இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கத்தில் சிவராஜ் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். 

இது குறித்து இயக்குநர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “இந்தப் படம் அறிவியல் புனைவு என தகவல்கள் சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது. அதெல்லாம் இல்லை. இது ஆக்‌ஷன் திரைப்படம்தான். ரசிகராக அவரது படங்களை பார்த்து வளர்ந்த எனக்கு அவரை புதிய கதாபாத்திரத்தில் பார்க்க ஆசை. இந்தப் படத்தில் நடிக்க அவரும் ஆர்வமாக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார். 

Story image

வரலாற்று திரைப்படமாக இருக்குமெனவும் 2025இல் இந்தப் படம் வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழில் வெளியான ஜெயிலர், கேப்டன் மில்லர் படங்களில் சிவராஜ் குமாருக்கு தமிழ், கன்னட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.