

நடிகர் மம்மூட்டியின் “களம்காவல்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், கேரளத்தில் 360-க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்படுகிறது.
நடிகர்கள் மம்மூட்டி மற்றும் விநாயகன் ஆகியோர் நடிப்பில் உருவான “களம்காவல்” திரைப்படம் நேற்று (டிச. 5) திரையரங்குகளில் வெளியானது. c
துல்கர் சல்மானின் ‘குரூப்’ திரைப்படத்தின் எழுத்தாளர் ஜிதின் கே. ஜோஸ் இயக்கத்தில் க்ரைம் திரில்லராக உருவான இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், வெறும் ஒரு மணிநேரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.
இந்த நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பு அளித்து வரும் நிலையில், களம்காவல் திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்ட 260 திரைகள் 365 ஆக அதிகரித்துள்ளதாக, நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஆச்சரியப்படுத்தும் துரந்தர் பட முதல்நாள் வசூல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.