நடிகர் ரிஷப் ஷெட்டி தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கன்னட சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. 2012 ஆம் ஆண்டில் வெளியான துக்ளக் என்கிற கன்னட படம் மூலம் சினிமாவுக்கு அறிமுககமான ரிஷப் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதில், கருட கமன விருஷப வாகன திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து, காந்தாரா என்கிற படத்தை எழுதி, இயக்கி, நடித்தார். ரூ. 15 கோடியில் உருவான அப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தியளவில் ரிஷப் ஷெட்டியைப் பிரபலப்படுத்தியது.
தற்போது, சத்ரபதி சிவாஜி, ஹனுமன் - 2 உள்ளிட்ட பான் இந்திய படங்களில் நடித்து வருவதுடன் காந்தாரா முதல் பாகத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த நிலையில், இப்படத்திற்காக ரூ. 100 கோடி சம்பளமாகக் கேட்டதுடன் படத்தின் லாபத்திலும் ரிஷப் ஷெட்டி பங்கு கேட்டுள்ளாராம்.
காந்தாராவில் ரூ. 4 கோடி சம்பளம் பெற்றவர் தன் அடுத்தபடத்தில் 25 மடங்கு அதிகமாக சம்பளம் பெறவுள்ளது கன்னட சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: முதல்வர் விஜய்யா? சர்ச்சையாகும் புதிய பட டிரைலர்!
summary
actor rishab shetty increses his salary. getting rs. 100 crore for kantara chapter 1 release on oct 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரசனில் இணைந்த விக்ராந்த்!
சம்பளத்தை உயர்த்திய ருக்மணி வசந்த்!

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

ஏகே - 64 திரைப்படத்தில் மோகன்லால்?
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

