நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இனி, சனிக்கிழமையிலும் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இரு தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

News image

அயலி, கார்த்திகை தீபம் தொடரின் நாயகிகள்

Updated On :28 ஜூலை 2025, 5:05 pm IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இரு தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் மற்றும் அயலி தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் ஒளிபரப்பாகாது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாதங்களில் வரும் பண்டிகைகளுக்கு ஏற்ப தொடர்களிலும் திரைக்கதைகள் மாற்றி அமைக்கப்படுவதால், பெண்கள் பலரையும் இந்தத் தொடர்கள் கவர்ந்துள்ளன. தற்போது ஆடி மாதத் திருவிழா, அம்மன் வழிபாடுகளை மையப்படுத்தி தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.

அவ்வபோது, புதிய தொடர்களின் வருகை காரணமாக ஏற்கெனவே ஒளிபரப்பாகிவரும் தொடர்களின் நேரம் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். இதேபோன்று, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர்கள் வாரத்தில் 5 நாள்களுக்கு பதில் 6 நாள்களாக ஒளிபரப்பப்படுவதும் வழக்கமானது.

அந்தவகையில் ஜீ தமிழின் அயலி மற்றும் கார்த்திகை தீபம் ஆகிய இரு தொடர்களும், இனி சனிக்கிழமையிலும் ஒளிபரப்பாகவுள்ளதாக தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், அயலி தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கும், கார்த்திகை தீபம் தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The time of two serials airing on Zee Tamil TV has been changed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.