இளையராஜா லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி இசையை சென்னையில் நிகழ்த்துவதாக அறிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா வேலியண்ட் எனப் பெயரிட்ட தன் சிம்பொனி இசையை லண்டனில் கடந்த மார்ச் மாதம் அரங்கேற்றம் செய்தார். சிம்பொனி இசைக்கென பிரபலமான ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழு இளையராஜாவின் இசைக்குறிப்புகளை வாசித்து அசத்தினர்.
இதனால், சிம்பொனியை எழுதி அதனை சர்வதேச அளவில் அரங்கேற்றிய ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை இளையராஜா பெற்றார்.
இந்த நிலையில், இன்று தன் பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி இசையை என் மக்களும் கேட்க வேண்டும் என்பதற்காக, வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன். லண்டனில் வாசித்தே ராயல் ஆர்கெஸ்ட்ரா குழுவினரே இங்கு வந்து வாசிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
இது இசை ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் இளையராஜாவின் சிம்பொனியைக் கேட்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லண்டனில் யூதர்களுக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ்களுக்கு தீவைப்பு!
சென்னையில் இளையராஜா சிம்பொனி இசை!

இளையராஜா பயோபிக் கைவிடப்படவில்லை!
இசைஞானி இளையராஜாவின் முதல் சிம்பொனி
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

