திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

குஜராத் விமான விபத்து! குபேரா முன்வெளியீடு ஒத்திவைப்பு!

நடிகர் தனுஷின் குபேரா படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி ஒத்திவைப்பு

News image
Updated On :13 ஜூன் 2025, 4:05 pm IST

நடிகர் தனுஷின் குபேரா படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் நடிகர் தனுஷும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளதால் குபேரா மீதான எதிர்பார்ப்பு தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ரூ. 120 கோடி பட்ஜெட்டில், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ஜூன் 20 ஆம் தேதியில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் இன்று (ஜூன் 13) வெளியிடப்படவுள்ளது.

இந்த நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தால், குபேரா படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி தேதி மாற்றியமைக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்தது.

Story image

அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் பலியான நிலையில், திரைப்படத்தை வெளியிடுவது கலாசாரத்துக்கு ஏற்றதாகவோ நாகரிகமானதோ அல்ல என்ற கருத்துகளும் வலம் வருவதால், குபேரா வெளியீடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதுகுறித்த தகவல்கள் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகியும் வருகிறது.

இதனிடையே, அமெரிக்காவில் இதுவரையில் குபேரா படத்தின் 956 டிக்கெட்டுகள் விற்கப்பட்டு, 17,013 டாலர் (ரூ. 14.65 லட்சம்) வசூலாகி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.