நடிகர் சூர்யா தன் 45-வது படத்தில் கடவுள் வேடத்தில் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
த்ரிஷா, சுவாசிகா என நடிகர்கள் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் விரைவில் வெளியீட்டு பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.
இப்படத்திற்குக் கருப்பு எனப் பெயரிட்டுள்ளனராம். பெயர் டீசர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூன் 23 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்திலும் கடவுள் வேடத்திலும் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடவுள் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக மாறி வாதாடுவதுபோல் காட்சிகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: வெற்றி மாறனால் தனுஷுக்கு சங்கடம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.