ஆத்தி அடி ஆத்தி... வீர தீர சூரன் 2-வது பாடல் வெளியீடு!
விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது.
சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம் வீர தீர சூரன். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தங்கலான் வெற்றிக்குப் பின்னர் வெளியாகும் விக்ரமின் படம் என்பதால் வீர தீர சூரன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, இப்படத்தின் முதல் பாடலான ’கல்லூரும் காத்து’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க | காதலரைப் பிரிந்த நடிகை தமன்னா !
இந்த நிலையில், இரண்டாவது பாடலான, ‘ஆத்தி அடி ஆத்தி’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ், சாதிகா பாடியுள்ளனர்.
இப்படத்தை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

