சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

அமைச்சர் அன்பில் மகேஸ் நடித்த தொடர் எது தெரியுமா?

அமைச்சர் அன்பில் மகேஸ் நடித்த தொடர் குறித்து....

News image

அமைச்சர் அன்பில் மகேஸ்.

Updated On :11 மார்ச் 2025, 1:42 pm IST

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அகல்யா என்ற தமிழ் தொடரில் நடித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் குருவி படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இவரைப்போலவே அவரது தந்தையும் முதல்வருமான ஸ்டாலினும் சினிமா, சீரியல் என நடித்துவிட்டு, பின்னர் அரசியலில் ஈடுபட்டு தற்போது முதல்வராக உள்ளார்.

நடிகரும் துணை முதல்வருமான உதயநிதியின் நெருங்கிய நண்பரான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் சன் தொலைக்காட்சியில் 2004 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அகல்யா தொடரில் நடித்துள்ளார். இத்தொடரில் மஞ்சரி, அப்சர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இத்தொடரில் இவர் ஒரே காட்சியில் மட்டும் நடித்திருந்தாலும், இத்தொடரின் பாடலில் இக்காட்சி இணைக்கப்பட்டதால், தினமும் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக அன்பில் மகேஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதனால், தயாநிதி மாறன், ‘உன் நண்பன் என்பதால் ஒரே காட்சியில் நடித்ததை தினமும் ஒளிபரப்பு செய்வாயா’ என்று உதயநிதியிடம் கேட்டதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸின் நேர்காணல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அகல்யா தொடரின் டைட்டில் பாடலை டி. இமான் இசையமையத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.