பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கிங்ஸ்டனால் ஜி.வி.பிரகாஷுக்கு ஏமாற்றம்!

கிங்ஸ்டன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்விப்படமாகியுள்ளது...

Published On :

கிங்ஸ்டன் திரைப்படம் தோல்வியடைந்ததால் ஜி.வி.பிரகாஷுக்கு மீண்டும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடித்த கிங்ஸ்டன் திரைப்படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியிருந்தார்.

கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவராக நடித்திருந்தார்.

கடந்த மார்ச். 7 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக சுமாரான வசூலையாவது வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 5 கோடிக்கும் குறைவாக திரையரங்க வசூலாக ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இசையமைப்பாளராக ஜொலிக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு நடிகராக இன்னும் அழுத்தமான படம் எதுவும் அமையவில்லை.

தன் 25-வது படமான கிங்ஸ்டனில் வெற்றி பெறுவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்படம் தோல்வியடைந்துள்ளதால் ஜி.வி.யே கடும் ஏமாற்றத்தில் இருக்கிறாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.