ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கிங்ஸ்டனால் ஜி.வி.பிரகாஷுக்கு ஏமாற்றம்!

கிங்ஸ்டன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்விப்படமாகியுள்ளது...

News image
Updated On :17 மார்ச் 2025, 5:26 pm IST

கிங்ஸ்டன் திரைப்படம் தோல்வியடைந்ததால் ஜி.வி.பிரகாஷுக்கு மீண்டும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடித்த கிங்ஸ்டன் திரைப்படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியிருந்தார்.

கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவராக நடித்திருந்தார்.

கடந்த மார்ச். 7 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக சுமாரான வசூலையாவது வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 5 கோடிக்கும் குறைவாக திரையரங்க வசூலாக ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இசையமைப்பாளராக ஜொலிக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு நடிகராக இன்னும் அழுத்தமான படம் எதுவும் அமையவில்லை.

தன் 25-வது படமான கிங்ஸ்டனில் வெற்றி பெறுவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்படம் தோல்வியடைந்துள்ளதால் ஜி.வி.யே கடும் ஏமாற்றத்தில் இருக்கிறாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.